முந்தைய கட்டுரையில் சொன்னபடி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் நிதிசார்ந்த முடிவுகளை நடைமுறைப் படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். அதற்கு முதல் அடிப்படை நிதித் தரவுகள். அதாவது குடும்பத்தின் வரவு செலவு பற்றிய தகவல்கள். எடுத்துக்காட்டாக, வருமானம் என்றால் சம்பளம் மற்றும் பிற வருமானங்கள். சம்பளக்காரர்களுக்கு வருமானத் தகவல் வெளிப்படை. தொழில்முனைவோருக்கு அது அவ்வளவு தெளிவானதல்ல. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அதனால் நிதி மேலாண்மை இரு வகையினருக்கும் ஒரே போன்றதல்ல. இந்தக் கட்டுரையில் மாதச் சம்பளக்காரர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
வருமானம்
பிடித்தம், வருமான வரி போக உள்ள வருமானம் ஒரளவு தெளிவானது. இதில் பெரிய முரண்கள் இருக்காது. அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டமிடலுக்கு இது தான் ஆதாரம். இதில் முக்கியமானது என்னவென்றால், திட்டமிடலுக்கு ஊக்கத்தொகையைக் (போனஸ்) கணக்கிலெடுக்கக் கூடாது. நிச்சயமான நிகர வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.
செலவு
இதில் தான் பலருக்கும் பிரச்சினை. தரவுகள் தெளிவாக இல்லாமல் இருப்பது இங்கே தான். எங்கள் அனுபவத்தில், கணவன் மனைவி இருவருக்கும் செலவுத் தகவல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாகத் தெரியும் பட்சத்தில் அங்கே நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது. இதற்கு அடிப்படையானது கணவனுடைய மனப்பாங்கு. அதாவது, மனைவியானவள் குடும்பத்திற்கு வழங்கும் உழைப்பின் நிமித்தம் தன்னால் 'நன்கு கவனிக்கப்பட' வேண்டியவள் என்று எண்ணாமல், மனைவி குடும்பம் என்ற நிறுவனத்தின் ஐம்பது சதவீத பங்குதாரர் என்று எண்ணுவது. இதில் கணவனுடைய 'பெருந்தன்மை' ஏதுமில்லை. ஏனென்றால், குடும்பத்தின் உருவாக்கத்தில் கணவனுக்கு இணையான நிதி சார்ந்த அபாயத்தை (ரிஸ்க்) மனைவியும்தான் எதிர்கொள்கிறார். முந்தைய கட்டுரையில் சொன்னது போலவே, இது பெரும்பாலும் ஒற்றை வருமானம் (கணவன் வேலைக்குச் செல்லும்) கொண்ட குடும்பங்களில்தான் அதிகம். இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்களில் வெளிப்படைத் தன்மை அதிகம். அங்கே கணவனுடைய 'பெருந்தன்மைக்கு' வேலையில்லை.
செலவுகளை மூன்றாகப் பிரிக்கலாம்.
ஆக, ஒரு குடும்பம் திட்டமிட எஞ்சியிருப்பது வாழ்வுச்செலவுக்கும் தொழிற் செலவுக்கும் போக மீதமுள்ள பணமே. அதை எப்படித் திட்டமிடுவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வருமானம்
பிடித்தம், வருமான வரி போக உள்ள வருமானம் ஒரளவு தெளிவானது. இதில் பெரிய முரண்கள் இருக்காது. அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டமிடலுக்கு இது தான் ஆதாரம். இதில் முக்கியமானது என்னவென்றால், திட்டமிடலுக்கு ஊக்கத்தொகையைக் (போனஸ்) கணக்கிலெடுக்கக் கூடாது. நிச்சயமான நிகர வருமானத்தை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.
செலவு
இதில் தான் பலருக்கும் பிரச்சினை. தரவுகள் தெளிவாக இல்லாமல் இருப்பது இங்கே தான். எங்கள் அனுபவத்தில், கணவன் மனைவி இருவருக்கும் செலவுத் தகவல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாகத் தெரியும் பட்சத்தில் அங்கே நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கிறது. இதற்கு அடிப்படையானது கணவனுடைய மனப்பாங்கு. அதாவது, மனைவியானவள் குடும்பத்திற்கு வழங்கும் உழைப்பின் நிமித்தம் தன்னால் 'நன்கு கவனிக்கப்பட' வேண்டியவள் என்று எண்ணாமல், மனைவி குடும்பம் என்ற நிறுவனத்தின் ஐம்பது சதவீத பங்குதாரர் என்று எண்ணுவது. இதில் கணவனுடைய 'பெருந்தன்மை' ஏதுமில்லை. ஏனென்றால், குடும்பத்தின் உருவாக்கத்தில் கணவனுக்கு இணையான நிதி சார்ந்த அபாயத்தை (ரிஸ்க்) மனைவியும்தான் எதிர்கொள்கிறார். முந்தைய கட்டுரையில் சொன்னது போலவே, இது பெரும்பாலும் ஒற்றை வருமானம் (கணவன் வேலைக்குச் செல்லும்) கொண்ட குடும்பங்களில்தான் அதிகம். இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்களில் வெளிப்படைத் தன்மை அதிகம். அங்கே கணவனுடைய 'பெருந்தன்மைக்கு' வேலையில்லை.
செலவுகளை மூன்றாகப் பிரிக்கலாம்.
- வாழ்வுச்செலவு
- தொழிற் செலவு
- விருப்பச் செலவு
ஆக, ஒரு குடும்பம் திட்டமிட எஞ்சியிருப்பது வாழ்வுச்செலவுக்கும் தொழிற் செலவுக்கும் போக மீதமுள்ள பணமே. அதை எப்படித் திட்டமிடுவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.