ஹெச் டி எப் சி பரஸ்பர நிதியின் (HDFC Mutual Fund) முதன்மை செயல் அலுவலரும் (CEO) செயல் இயக்குனருமான (Executive Director) பிரஷாந்த் ஜெயின் தி ஹிந்து பிசினஸ்லைன் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து சில விஷயங்கள்.
- முதலீடு பற்றிய எனது அணுகுமுறை மிக எளிமையானதாகவே இருந்திருக்கிறது. நல்ல நிர்வாகிகளால் மேலாண்மை செய்யப்படும் தொடர்ந்து தாக்குபிடிக்கக் கூடிய தொழில்களை , நல்ல விலையிலோ குறைவாகவோ வாங்கி போதுமான அளவுக்குப் பன்முகப்படுத்தி பொறுமையோடு இருப்பது.
- நல்ல மதிப்பீட்டில் கிடைக்கும் தரமான, தாக்குப்பிடிக்கக்கூடிய தொழில்களில்முதலீடு செய்வது முதலீட்டு செயல்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.
- ரிஸ்க் கட்டுப்படுத்த வேண்டி, மோசமான நேரங்களிலும் நெருக்கடிக்கு பணியாமல் இந்த ஒழுங்கைத் தக்க வைப்பது முக்கியம்.
- குறைந்த பட்ச வீழ்ச்சி அபாயத்துடன் ஓரளவு தொடர்ச்சியாக மிதமான வருமானத்தை உற்பத்தி செய்யும் ஒரு முதலீட்டாளர், சில நேரங்களில் அபிரிமிதமான வருமானத்தையும் ஆனால் சமயங்களில் குறிப்பிடத்தக்க நட்டங்களையும் ஏற்படுத்தும் முதலீட்டாளரோடு ஒப்பிடுகையில் சிறப்பாகவே இருப்பார். 16 சதவிகித பத்தாண்டு வருமானம் என்பது 20 சதவிகித 9 ஆண்டு வருமானத்தைத் தொடர்ந்த பத்தாவது வருட 15 சதவிகித நட்டத்தைவிட அதிகமாக இருக்கும்.
- நான் பங்குச்சந்தையில் இருந்து வந்துள்ள 20 வருடங்களில் 3 பெரும் சுழற்சிகளைப் பார்த்துள்ளதோடு அந்த ஒவ்வொரு சுழற்சியிலும் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் தவறிழைத்ததை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இது சங்கடமானது ஆனாலும் துரதிர்ஷ்டவசமான உண்மை.
- கடந்த 20 ஆண்டுகளாக நான் பங்குச் சந்தையில் இருந்து வந்துள்ள காலத்தில், 3 பெரும் சுழற்சிகளைப் பார்த்ததோடு, ஒவ்வொரு சுழற்சியிலும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் காலம் தவறுவதைப் பார்த்திருக்கிறேன். இது சங்கடமானாலும் உண்மை.
- 2008 மார்ச்சில் 15600 அளவுகளில் முடிவதற்கு முன், 2003 ல் 3000 அளவுகளிலிருந்து 2008 ஜனவரியில் 21000 க்கு மேலான உச்சத்திற்கு சென்செக்ஸ் (SENSEX) சென்றபோது, பங்குச்சந்தை பரஸ்பர நிதி (EQUITY MUTUAL FUND) விற்பனை 2002-2003ல் வெறும் ரூ.118 கோடியிலிருந்து 2007-2008ல் ரூ.53,000 கோடிக்கு உயர்ந்தது. அதிலிருந்து, 2009 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில், சரியும் சந்தையிலும் குறைந்த PE மடங்குகளிலும் பரஸ்பர நிதி ரூ.6000 கோடி வெளியேறக் கண்டிருக்கிறது. எளிதாகச் சொன்னால், PE அதிகமாக இருந்த காலத்தில், 2008 நிதியாண்டில் மட்டும் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான பங்கு நிதி வாங்கப் பட்டிருக்கின்றது. ஆனால் PE குறைவாக இருந்தபோது நான்கு வருட காலத்தில் கிட்டத்தட்ட ரூ.6000 கோடி மதிப்புள்ள பங்கு நிதி விற்கப்பட்டது.
- இது ஏனென்றால், முதலீட்டாளர்கள் PE* மடங்குகளில் (PE Multiple) மீதல்லாது கடந்த கால வருமானம் மற்றும் செய்திகளின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்வதுதான்.
- முதலீட்டாளர்கள் குறைந்த PE மடங்குகளில் முதலீடு செய்யப் பழக வேண்டும். சந்தை சரியாக இல்லாத காலத்தில், சந்தையின் மனநிலை பலவீனமாக இருக்கும்போது செய்திகள் மோசமாக வரும்போதுதான் குறைந்த PE அளவுகள் கிடைக்கும்.
- தற்போது சந்தை 20 சதம் மேலிருந்தாலும் PE விகிதம் நீண்டகால சராசரிக்கும் கீழேயே உள்ளது. மேலும், வட்டி விகிதம் கீழே செல்ல வாய்ப்புள்ளது.
- எனது கருத்தில், முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் தாக்குபிடிக்கும் திறனுக்கு ஏற்றவாறும் நீண்டகால நோக்கிலும் பங்குகளில் ஒதுக்கீடு செய்வதைக் கூட்டுவதையோ தக்கவைத்துக் கொள்வதையோ செய்ய வேண்டும்.