Sunday, October 9, 2011

ஒரு அறிமுகம்

அபு பக்கர் சித்திக் 2008 ல் நிதித் திட்டமிடுதல் சான்றிதழ் (Certified Financial Planner) பெற்றார். அதற்கு முன்பே பண்டகச் சந்தையில் (Commodities Futures Market) நல்ல அனுபவம் உண்டு. பரஸ்பர நிதி (Mutual Fund) மற்றும் காப்பீடு (ஆயுள், மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு போன்றவை) விசயங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். தமிழ்நாடு நிதித் திட்டமிடுபவர் கழகத்திலும் (Tamilnadu Financial Planner's Association - TNFPA http://www.tnfpa.com) முக்கிய பங்கு வகிக்கிறார். நல்ல நண்பர். அவரே எங்களது நிறுவனத்தின் (Accrue - http://www.accruetrade.com/) தலைமை நிதித் திட்டமிடுபவர் (Chief Financial Planner). 
சில மாதங்களுக்கு முன் நாணயம் விகடனில் மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பீடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இப்போது (16.10௦.2011 இதழ்), மாதம் ரூ.14500 வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு இவர் தயாரித்த நிதித் திட்டம் நாணயம் விகடனில் வந்திருக்கிறது. பெரிய வருமானம் உள்ளவர்கள் மட்டுமே நிதித் திட்டமிட தகுதியுள்ளவர்கள் என்ற பொதுக் கருத்தை இது உடைக்கிறது. சிறு குடும்பமும் எதிர்காலத்தைத் தெளிவாகத் திட்டமிடலாம் என்பதற்கு நல்ல உதாரணம். பணவிவகாரத்திலும் இவரது கருத்துக்கள் வெளிவரும். கட்டுரையை இங்கே வாசிக்கலாம். http://www.vikatan.com 

இவரது வலைப்பதிவு http://nithivalam.wordpress.com/