Wednesday, February 13, 2013

பரேட்டோ விதி


த்மநாபன் சென்னையிலிருந்து இயங்கும் ஒரு நிதி திட்டமிடல் நிபுணர். தொடர்ந்து  நாணயம் விகடனில் நிதித் திட்டமிடல் பற்றியும் முதலீடுகள் பற்றியும் எழுதி வருகிறார். சன் செய்திகளிலும் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். பணவிவகாரத்தில் இவரது முதல் பதிவு இது.

பரேட்டோ விதி
இந்த விதி பொதுவாக எல்லா இடத்திலும் பொருந்தக்கூடியது. 80 சதவீத மக்கள் 20 சதவீத மக்களுக்காக வேலை செய்கிறார்கள், 20 சதவீத பணக்காரர்கள் உலகின் 80 சதவீத செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேட்டோ விதி நமது அன்றாட வாழ்க்கையிலும் பொருந்தினாலும் பெரும்பாலும் யாரும் அதைச் சிந்திப்பதில்லை.
ஒருவர் மதம் ரூ.50000 சம்பாதிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அதில் 80 சதவீதமான ரூ.40000 செலவு செய்துவிட்டு 20 சதவீதமான ரூ.10000 சேமிக்கிறார். இவர் 21 வயதில் வேலைக்குச் சென்று 25 வயதில் மணம் செய்கிறார். இவர் 55 வயதில் ஓய்வு எடுப்பதாக வைத்துக் கொண்டால் பணிக்காலம் இன்னும் 30 வருடங்கள் உள்ளன. ஒவ்வொரு சம்பள உயர்வுக்கும் சம விகிதாசாரத்தில் செலவும் இருக்கும். ஒரு கணக்குக்காக சம்பளமும் செலவும் அடுத்தட 30 வருடங்களுக்கு மாறாது என்று வைத்துக் கொள்வோம்.
ஆக அவர் அடுத்த 30 வருடத்தில் ரூ. 1.80 கோடி (50,000*12*30) சம்பாதிப்பார். அதில் 1.44 கோடி ரூபாயை தனது வாழ்க்கை முறையை தக்கவைக்க செலவு செய்து செய்தது போக மீதமுள்ள ரூ.36 லட்சம் மட்டுமே சேமிக்கப்படும்.
55 வயதுக்குப் பிறகு வருமானமே இருக்காது அல்லது மிகக் குறைந்த வருமானமே இருக்கும். 15% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி அவரது சேமிப்பு ரூ.10,000 அடுத்த 30 வருடத்தில் 7 கோடி ரூபாய் ஆகியிருக்கும். 12% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி கூட ரூ. 3.52 கோடி கிடைக்கும். இது அவரது மொத்த 30 வருட உழைப்பூதியத்தை விட அதிகம். வெறும் 3% அதிக வ.கூ.வ. விகிதம் முதலீட்டை இரட்டிப்பாக்கி விடுகிறது. தொடங்கியதிலிருந்து சென்செக்ஸ் (SENSEX) 17% வ.கூ.வ. விகிதம் கொடுத்துள்ளது. உயர் தரமான பரஸ்பர நிதிகள் இதுவரை 20% க்கும் மேலான வளர்ச்சியைக் கொடுத்துள்ளன. உங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நீண்ட கால முதலீட்டில் 15% வ.கூ.வ. விகிதம் கிடைக்கும் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.  
இங்கே பிரச்சினை என்னவென்றால், பலர் தங்களது வருமானத்தில் 10% கூட தொடர்ச்சியாக சேமிப்பதில்லை. செல்வ வளத்தை உருவாக்குவது குழந்தை விளையாட்டு, ஒழுங்கு மட்டும் இருந்தால்.

Thursday, January 3, 2013

பங்குச்சந்தை முதலீடு - ஒரு நேர்காணல்


PRASHANT JAIN, EXECUTIVE DIRECTOR AND CHIEF INVESTMENT OFFICER, HDFC MUTUAL FUND 

 ஹெச் டி எப் சி பரஸ்பர நிதியின் (HDFC Mutual Fund) முதன்மை செயல் அலுவலரும் (CEO) செயல் இயக்குனருமான (Executive Director) பிரஷாந்த் ஜெயின் தி ஹிந்து பிசினஸ்லைன் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து சில விஷயங்கள்.   
  • முதலீடு பற்றிய எனது அணுகுமுறை மிக எளிமையானதாகவே இருந்திருக்கிறது. நல்ல நிர்வாகிகளால் மேலாண்மை செய்யப்படும் தொடர்ந்து தாக்குபிடிக்கக் கூடிய தொழில்களை , நல்ல விலையிலோ குறைவாகவோ வாங்கி போதுமான அளவுக்குப்  பன்முகப்படுத்தி பொறுமையோடு இருப்பது.
  • நல்ல மதிப்பீட்டில் கிடைக்கும் தரமான, தாக்குப்பிடிக்கக்கூடிய தொழில்களில்முதலீடு செய்வது முதலீட்டு செயல்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.
  • ரிஸ்க் கட்டுப்படுத்த வேண்டி, மோசமான நேரங்களிலும் நெருக்கடிக்கு பணியாமல் இந்த ஒழுங்கைத் தக்க வைப்பது முக்கியம்.
  • குறைந்த பட்ச வீழ்ச்சி அபாயத்துடன் ஓரளவு தொடர்ச்சியாக மிதமான வருமானத்தை உற்பத்தி செய்யும் ஒரு முதலீட்டாளர், சில நேரங்களில் அபிரிமிதமான வருமானத்தையும் ஆனால் சமயங்களில் குறிப்பிடத்தக்க நட்டங்களையும் ஏற்படுத்தும் முதலீட்டாளரோடு  ஒப்பிடுகையில் சிறப்பாகவே இருப்பார். 16 சதவிகித பத்தாண்டு  வருமானம் என்பது  20 சதவிகித 9 ஆண்டு வருமானத்தைத் தொடர்ந்த பத்தாவது வருட 15 சதவிகித நட்டத்தைவிட அதிகமாக இருக்கும்.
  • நான் பங்குச்சந்தையில் இருந்து வந்துள்ள 20 வருடங்களில் 3 பெரும் சுழற்சிகளைப் பார்த்துள்ளதோடு அந்த ஒவ்வொரு சுழற்சியிலும் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் தவறிழைத்ததை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இது சங்கடமானது ஆனாலும் துரதிர்ஷ்டவசமான உண்மை.
  • கடந்த 20 ஆண்டுகளாக நான் பங்குச் சந்தையில் இருந்து வந்துள்ள காலத்தில், 3 பெரும் சுழற்சிகளைப் பார்த்ததோடு, ஒவ்வொரு சுழற்சியிலும் பெரும்பாலான  முதலீட்டாளர்கள் காலம் தவறுவதைப் பார்த்திருக்கிறேன். இது சங்கடமானாலும் உண்மை.
  • 2008 மார்ச்சில் 15600 அளவுகளில் முடிவதற்கு முன், 2003 ல் 3000 அளவுகளிலிருந்து  2008 ஜனவரியில் 21000 க்கு மேலான உச்சத்திற்கு சென்செக்ஸ் (SENSEX) சென்றபோது, பங்குச்சந்தை பரஸ்பர நிதி (EQUITY MUTUAL FUND) விற்பனை 2002-2003ல் வெறும் ரூ.118 கோடியிலிருந்து 2007-2008ல் ரூ.53,000 கோடிக்கு உயர்ந்தது. அதிலிருந்து, 2009 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில், சரியும் சந்தையிலும் குறைந்த PE மடங்குகளிலும் பரஸ்பர நிதி ரூ.6000 கோடி வெளியேறக் கண்டிருக்கிறது. எளிதாகச் சொன்னால், PE அதிகமாக இருந்த காலத்தில், 2008 நிதியாண்டில் மட்டும் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான பங்கு நிதி வாங்கப் பட்டிருக்கின்றது. ஆனால் PE குறைவாக இருந்தபோது நான்கு வருட காலத்தில் கிட்டத்தட்ட ரூ.6000 கோடி மதிப்புள்ள பங்கு நிதி விற்கப்பட்டது.
  • இது ஏனென்றால், முதலீட்டாளர்கள் PE* மடங்குகளில் (PE Multiple) மீதல்லாது கடந்த கால வருமானம் மற்றும் செய்திகளின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்வதுதான்.
  • முதலீட்டாளர்கள் குறைந்த PE மடங்குகளில் முதலீடு செய்யப் பழக வேண்டும். சந்தை சரியாக இல்லாத காலத்தில், சந்தையின் மனநிலை பலவீனமாக இருக்கும்போது செய்திகள் மோசமாக வரும்போதுதான் குறைந்த PE அளவுகள் கிடைக்கும்.
  • தற்போது சந்தை 20 சதம் மேலிருந்தாலும் PE விகிதம் நீண்டகால சராசரிக்கும் கீழேயே உள்ளது. மேலும், வட்டி விகிதம் கீழே செல்ல வாய்ப்புள்ளது.
  • எனது கருத்தில், முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் தாக்குபிடிக்கும் திறனுக்கு ஏற்றவாறும் நீண்டகால நோக்கிலும் பங்குகளில் ஒதுக்கீடு செய்வதைக்  கூட்டுவதையோ தக்கவைத்துக் கொள்வதையோ செய்ய வேண்டும்.
   * PE - Profit Earnings Ratio = ஒரு பங்கின் விலை / ஒரு பங்கின் வருமானம்